பாத்சாகி மசூதி
லாகூரில் உள்ள முகலாயர்களின் காலத்திய மசூதி / From Wikipedia, the free encyclopedia
பாத்சாகி மசூதி ( பஞ்சாபி மற்றும் உருது: بادشاہی مسجد ) அல்லது "இம்பீரியல் மசூதி" என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபின் தலைநகரான லாகூரில் உள்ள முகலாயர்களின் காலத்திய மசூதி ஆகும் [1] . இந்த மசூதி லாகூர் கோட்டைக்கு மேற்கே வால்ட் சிட்டி ஆஃப் லாகூரின் புறநகரில் அமைந்துள்ளது,[2] இது லாகூரின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3]
பாத்சாகி மசூதி, பேரரசர் அவுரங்கசீப் அவர்களால் 1671 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1673 வரை இரண்டு ஆண்டுகள் நீடித்த கட்டமைப்பால், கட்டப்பட்டது. இந்த மசூதி முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் வெளிப்புறம் சிவப்பு பளிங்கு மணற்கற்களால் செதுக்கப்பட்ட பொறிப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது முகலாய காலத்தின் மிகப்பெரிய மசூதியாக உள்ளது, இது பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய மசூதியாகும்.[4] முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த மசூதி சீக்கிய சாம்ராஜ்யம் மற்றும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தால் ஒரு கேரிசனாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இது பாகிஸ்தானின் மிகச் சிறப்பு வாய்ந்த காண வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது.