பள்ளிக்கூடம்
From Wikipedia, the free encyclopedia
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். [1] பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கான பெயர்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன . ஆனால் பரவலாக சிறு குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளியும், ஆரம்பக் கல்வியை முடித்த இளைஞர்களுக்கான இடைநிலைப் பள்ளியும் இதில் அடங்கும். உயர் கல்வி கற்பிக்கப்படும் ஒரு நிறுவனம் பொதுவாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.
மழலையர் பள்ளி அல்லது பாலர் பள்ளிகள் பரவலாக இளம் குழந்தைகளுக்கு (பொதுவாக 3 முதல் 5 வயது வரை) சில பள்ளிப் படிப்புகளை வழங்குகிறது. பல்கலைக்கழகம், தொழிற்கல்விப் பள்ளி, கல்லூரி ஆகியவை மேல்நிலைப் பள்ளிக்குப் பிறகு கல்வி கற்க வகை செய்கிறது. பொருளாதாரம் அல்லது நடனம் போன்ற ஒரு குறிப்பிட்ட துறைகளைக் கற்பிக்கவும் சில பள்ளிகள் இருக்கலாம்.மாற்றுப் பள்ளிகளானது பாரம்பரியமற்ற பாடத்திட்டத்தையும் முறைகளையும் வழங்கலாம்.
அரசு சாரா பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை, கூடுதலான கல்வித் தேவைகளை வழங்குவதற்கு உதவுகிறது.[2] பிற தனியார் பள்ளிகள் மத ரீதியாகவும் இருக்கலாம், அதாவது கிறிஸ்தவ பள்ளிகள், குருகுல (இந்து பள்ளிகள்) மதராசா (அரபு பள்ளிகள்) ஹவ்சாஸ் (ஷியா முஸ்லீம் பள்ளிகள்) யெஷிவாஸ் (யூத பள்ளிகள்) , பிற பள்ளிகள் மாணவர்களது தனித் வளர்க்க முற்படுகின்றன.