பரலகேமுண்டி
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
பரலகேமுண்டி என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள கஜபதி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பழங்கால நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாக உள்ளது. ஊரில் பெரும்பான்மையான மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். நகரமும் மாவட்டமும் அதன் எல்லைகளை ஆந்திராவுடன் பகிர்ந்து கொள்கின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பாதபட்டினம் நகரம் அமைந்துள்ளது. பரலகேமுண்டி மற்றும் பாதபட்டினம் ஆகிய இவை இரண்டும் இரட்டை நகரமாக மக்களால் கருதப்படுகிறது. இரு நகரங்களும் மகேந்திர தனயா நதியால் பிரிக்கப்பட்டுள்ளன.