பயனர்:Babauever/இந்திய அண்டார்டிக் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய அண்டார்டிக் திட்டமானது பல்-துறை, பல்-நிறுவன திட்டமாகும். அது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences)தேசிய அண்டார்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வு மைய கட்டுப்பாட்டின் (National Centre for Antarctic and Ocean Research) கீழ் செயல்படும் திட்டமாகும். அது 1981 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிற்கான இந்திய ஆய்வுப் பயணத்தோடு துவக்கி வைக்கப்பட்டதாகும்.[0] திட்டமானது இந்தியா அண்டார்டிகா உடன்படிக்கையில் கையொப்பமிட்டதோடு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டில் தக்ஷிண் கங்கோத்ரி [1]அண்டார்டிக் ஆய்வுத் தளத்தைக் கட்டுவித்தனர், அதனைக் கடந்து 1990 ஆம் ஆண்டில் மைத்ரி தளத்தைக் கட்டுவித்தனர். திட்டத்தின் கீழ், வளி மண்டல, உயிரியல், புவி, இரசாயன மற்றும் மருத்துவ அறிவியல் ஆகியன இந்தியாவால் ஆய்விற்குட்படுத்தப்படுகிறது. இந்தியா 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரை 27 ஆய்வுப் பயணங்களை அண்டார்டிகாவிற்கு மேற்கொண்டிருக்கிறது. மேலும் தற்போது அப்பகுதியில் கூடுதலான ஓர் ஆய்வு நிலையத்தை 'பாரதி' என்ற பெயரில் கட்டுவிக்க திட்டமிட்டு வருகிறது.[2]