பனங்கூடல்
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஒரு நிலப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் கூட்டமாக அமைந்திருக்கும்போது அந்த இடம் பனங்கூடல் எனப்படுகிறது. இச் சொல் பனை, கூடல் என்னும் இரண்டு சொற்களின் கூட்டுச் சொல். பனைகள், தென்னை மற்றும் பழ மரங்களைப் போல் நட்டு, நீரூற்றி வளர்க்கப்படுவதில்லை. பனைகள் மரத்திலிருந்து விழும் பனம்பழங்களின் விதைகளில் இருந்து தானாகவே முளைத்து வளர்கின்றன. எனவே பனங்கூடல்கள் தானாகவே உருவானவையாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |