பத்மாவதி ( மத்தியப் பிரதேசம் )
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
பத்மாவதி (Padmavati) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள நவீன பவாயாவுடன் அடையாளம் காணப்பட்ட ஒரு பண்டைய இந்திய நகரமாகும். இது எட்டாம் நூற்றாண்டின் சமசுகிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞரான பவபூதியின் மாலதிமாதவன் (மாலதி – மாதவனின் காதல் கதை)[1] பாணபட்டரின் ஹர்ஷசரிதம்,[2] போஜ மன்னனின் சரசுவதிகண்டபாரணம் போன்ற பல சமசுகிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரா மற்றும் சிந்து நதிகளுக்கிடையில் அமைந்துள்ள சிகரங்கள் மற்றும் வாயில்கள் கொண்ட உயரமான மாளிகைகள் மற்றும் கோயில்கள் கொண்ட நகரத்தை பவபூதி விவரிக்கிறார்.
பத்மாவதி (பவாயா) | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25.77°N 78.25°E / 25.77; 78.25 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
ஏற்றம் | 305 m (1,001 ft) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கஜுராஹோவின் கொக்கலா கிரகபதி கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. [3] இந்நகரில் பலம் வாய்ந்த குதிரைகள் ஓடுவதால் புழுதி எழுந்ததாகவும், உயரமான மாளிகைகள் வரிசையாக இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[4]