![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/42/Goddess_Bhadrakali_Worshipped_by_the_Gods-_from_a_tantric_Devi_series_-_Google_Art_Project.jpg/640px-Goddess_Bhadrakali_Worshipped_by_the_Gods-_from_a_tantric_Devi_series_-_Google_Art_Project.jpg&w=640&q=50)
பத்திரகாளி
இந்து தெய்வம் / From Wikipedia, the free encyclopedia
பத்யிரகாளி (Bhadrakali , சமக்கிருதம்: भद्रकाली , வங்காள மொழி: ভদ্রকালী , தமிழ்: பத்ரகாளி , தெலுங்கு: భద్రకాళి , மலையாளம்: ഭദ്രകാളി , கன்னடம்: ಭದ್ರಕಾಳಿ , குடகு மொழி : ಭದ್ರಕಾಳಿ) (பொல்லின் பொருள் "கண்ணியமான காளி") [1] என்பவர் தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு இந்து மதம் தெய்வம் ஆவார். தேவி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரிய தெய்வமான சக்தி அல்லது ஆதி பராசக்தி ( துர்க்கை, தேவி, மகாதேவி, அல்லது மகாமயை என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற துடியான தெய்வ வடிவங்களில் இவரும் ஒருவர். கேரளத்தில் வணங்கப்படும் மகாகாளி, சாமுண்டி மற்றும் காளி போன்ற தெய்வங்கள் பெரிய தெய்வமான பத்திரக்காளியின் பிரபலமான வடிவங்களாகும். இதனால். கேரளத்தில் இவர் நல்லதைப் பாதுகாக்கும் மகாகளியாகவும் நன்மை மற்றும் நல்வாய்ப்பின் (அதிர்ஷ்டம்) வடிவமாகக் காணப்படுகிறார்.
பத்திரகாளி | |
---|---|
![]() | |
சமசுகிருதம் | भद्र कालि |
வகை | தேவி, ஆதிசக்தி, துர்க்கை |
இடம் | மணித்வீபம் |
துணை | வீரபத்திரர் |
நூல்கள் | காளிகா புராணம், சிவ புராணம் |
இந்த தெய்வம் மூன்று கண்கள், மற்றும் நான்கு, பதினாறு அல்லது பதினெட்டு கைகளைக் கொண்டவராக குறிக்கப்படுகிறார். இவர் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தியவாறு உள்ளார். இவருடைய தலையைச் சுற்றிலுமிருந்து தீப்பிழம்புகள் பாய்கின்றன, இவரது வாயில் இருந்து கோரைப் பற்கள் நீண்டுள்ளன. இவரது வழிபாடு சப்தகன்னியரின் தாந்த்ரீக பாரம்பரியத்துடனும், பத்து மகா வித்யக்களின் பாரம்பரியத்துடனும் தொடர்புடையது மற்றும் சக்தியின் அகன்ற குடையின் கீழ் வருகிறது. சர்க்காரா, கொடுங்கல்லூர், ஆட்டுக்கல், செட்டிகுளங்கரா, திருமந்தம்குன்னு மற்றும் சோட்டனிகாரை ஆகியவை கேரளத்தில் உள்ள பிரபலமான பத்ரகளி கோயில்கள் ஆகும்.
பத்ரகாளி முதன்மையாக நான்கு வடிவங்களில் வணங்கப்படுகிறார்: தாருகாஜித் (தாரிகா அரக்கனைக் கொன்றவளாக), தக்ஷாஜித் (தக்ஷனைக் கொன்றவளாக), ருருஜித் (ருரு என்ற அரக்கனைக் கொன்றவளாக) மற்றும் மஹிஷாஜித் (மகிஷாசூரனைக் கொன்றவளாக).