பட்டடைக்கல்
From Wikipedia, the free encyclopedia
பட்டடைக்கல் (anvil) என்பது வார்ப்பிரும்பால் அல்லது வடித்த எஃகாலான பொன்ம வேலை செய்யும் தட்டையான பரப்பமைந்த அகலமான பொன்மத் துண்டு ஆகும். இதன் மீது வேறொரு இரும்பு அல்லது எஃகுப் பணிப்பொருளை வைத்து வேலை செய்யப்படுகிறது.
பட்டடைக்கல் நடைமுறையில் எடைதிரண்டதாக அமைய வேண்டும். அப்போது தான் நாம் சமட்டியால் அடிக்கும் முழு ஆற்றலும் பணிப்பொருளுக்கு மாற்றப்படும். பெரும்பாலும் இது வடித்தே செய்யப்படுகிறது. பற்றுவைப்புத் தொழில்நுட்பம் வருவதற்கு முன் இது பொன்மப் பணியாளரின் முதன்மையான கருவியாக விளங்கியது.[1][2]
பெரும்பாலான தற்காலப் பட்டடைக்கற்கள் வார்ப்பிருபாலோ வடித்த எஃகாலோ செய்யப்படுகின்றன. இவற்றில் வெப்பப்பதம் படுத்திய பின்னதே வலிமை மிக்கது. விலைமலிவான பட்டடைக்கற்கள் வார்ப்பிரும்பாலோ தரங்குறைந்த எஃகாலோ செய்யப்படுகின்றன. மிகச் சீரிய பணிகளுக்கு இவை உருமாற்றம் அடைவதாலும் எதிர் அதிர்ச்சி த்ருவதாலும் ஏற்றனவாக அமைவதில்லை.