படுக்கைப் புண்
From Wikipedia, the free encyclopedia
மிகவும் நலிந்த நிலையில் உள்ள நோயாளர்கள் படுக்கையில் தாமாகவே அசைந்து படுப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் உடலின் சில இடங்களில் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வழுத்தம் அப்பகுதிகளில் உள்ள தோலின் இரத்த ஓட்டத்தை இல்லாமல் செய்கிறது. தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இரத்த ஓட்டம் தடைப்படுமானால் அப்பகுதிகளில் உள்ள தோல் பழுதடைந்து புண்கள் உருவாகின்றன. இவை படுக்கைப்புண்கள் எனப்படும். இவை தவிர உடலில் உணர்வு நரம்புகள் பாதிக்கபடும்போது தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படக்கூடிய இடங்களில், [உ-ம் பாதங்கள்,ஆசனப்பகுதி]உடலில் ஏற்படுத்தும் வலி காரணமாக உடல் தானாகவே அசைதலும் நிலைமாறுதலும் இல்லாமல் போகிறது. இதனாலும் அப்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. இவை அழுத்தப் புண்கள்.
விரைவான உண்மைகள் படுக்கைப் புண், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
படுக்கைப் புண் | |
---|---|
![]() | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | L89. |
ஐ.சி.டி.-9 | 707.0 |
நோய்களின் தரவுத்தளம் | 10606 |
ஈமெடிசின் | med/2709 |
ம.பா.த | D003668 |
மூடு