![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Navaratri_Bajan.jpg/640px-Navaratri_Bajan.jpg&w=640&q=50)
பஜனைகள்
From Wikipedia, the free encyclopedia
பஜனை என்பது பகிர்வு[1] எனப் பொருள்படும். ஒரு பிராந்திய மொழியில்,[1] சமய கருத்துகள் அல்லது ஆன்மீக சிந்தனையுடன் பாடும் பாடல்களை இச்சொல் குறிக்கிறது. பஜனை என்பது இசை[2] மற்றும் கலைகளின் ஒரு வகையாகும்.இதனைப் பாடுவதற்கு எவ்விதமான விதிமுறைகளும் இல்லை. இந்து சமயத்தில் குறிப்பாக வைணவத்தில் பக்தியை வளர்ப்பதற்காகப் பாடும் இசையாகும்.[1]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Navaratri_Bajan.jpg/640px-Navaratri_Bajan.jpg)
புனித நூல்கள், புகழ்பெற்ற இதிகாசங்கள், மகான்களின் போதனைகள், கடவுள் ஆகியவை பஜனையின் பொதுவான அம்சங்களாகும்.[2] இது பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடகர்கள், இசையுடனும், சில நேரங்களில் நடனத்துடனும்[3] ஆலயங்களிலோ, ஒரு மரத்தின் கீழோ, ஆற்றங்கரையிலோ அல்லது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலோ பாடப்படுவதாகும். [2][3]
தென்னிந்திய பக்தி முன்னோடிகளோடு தொடங்கி, பலவிதமான "பஜனைகள்" பக்தி இயக்கத்தில் உள்ள மகான்களால் பாடப்பட்டன. ஆனால் பக்தர்கள் பரவலாக அநாமதேயமாகவும் இசை மற்றும் நாட்டியக் கலை வழியாகவும் பங்களித்தனர். நிர்குனி, கோரகனதி, வல்லபபந்தி, அஷ்டாசாப், மதுர-பக்தி ஆகியவை பஜனைகளின் வகைப்பாடாகும். 'சம்ப்ரதாய பஜனை' முறையை தென்னிந்தியர்கள் வழக்கமாக செய்கிறார்கள்.[4]