![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Green_Boots.jpg/640px-Green_Boots.jpg&w=640&q=50)
பச்சை பூட்சு
From Wikipedia, the free encyclopedia
பச்சை பூட்சு அல்லது பச்சைப் பூட்டணி என்பது இமயமலையில் இறந்து கிடக்கும் ஒரு அடையாளம் தெரியாத மலையேறியின் உடலைக் குறிக்கிறது. இது இமயமலையின் எவரெசுட்டுக் கொடுமுடிக்குச் செல்லும் வடகிழக்கு முகட்டு வழியில் ஒரு இடக்குறியீடாக விளங்குகிறது.[1][2] இந்த உடல் யாருடையதென்று அலுவலகப்பூர்வமாக தெரியவில்லையெனிலும் இது 1996-இல் மலையேறும் போது இறந்த சேவாங் பல்ச்சோர் என்னும் ஒரு இந்திய மலையேறியின் உடலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த உடலில் இருந்த பச்சை நிறக் காலணியே பச்சை பூட்சு என்ற பெயர் வரக் காரணமாக இருக்கிறது. வடக்குப் பக்கமாக எவரெசுட்டில் ஏறிய மலையேற்றக் குழுக்கள் அனைத்தும் 8500 மீட்டர் (27,900 அடி) உயரத்தில் இந்த உடலை ஒரு சுண்ணாம்புக்கல்லால் ஆன குகைக்கருகில் கண்டுள்ளனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Green_Boots.jpg/640px-Green_Boots.jpg)
2014 மே மாதம் இந்த பச்சைப் பூட்சு காணப்படவில்லை என்று கூறப்பட்டாலும் 2017-இல் மலையேறிகள் அதே உயரத்தில் அதனை மீண்டும் கண்டனர். காணப்படாத சமயத்தில் அந்த உடல் கற்களால் மூடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.