பசுங்கூரை
From Wikipedia, the free encyclopedia
பசுங்கூரை என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும். (பசுமை என்ற சொல் பச்சை நிறத்தை குறிக்காமல் சுற்றுச்சூழலைக் குறிக்கின்றது). இது வேர்தடைக்கென்ற அடுக்கு போன்ற கூடுதல் அடுக்குகளையும் மேலும் நீர் பாசன அமைப்புகளையும் உள்ளடக்கலாம்.
தொட்டிகளில் பராமரிக்கப்படும் தாவரங்கள் உள்ள கூரை பொதுவாக பசுங்கூரையாக கருதப்படுவதில்லை. எனினும் இக்கருத்து விவாதிக்கபடுகின்றது. கூரை குளங்கள் பசுங்கூரையின் மற்றொரு வகை ஆகும்.
பசுங்கூரைகள் மழைநீர் உறுஞ்சுவது, வெப்பக்காப்பு வழங்குவது, வனவுயிரினங்களுக்கு ஒரு வாழ்விடத்தை உருவாக்கித்தருவது மற்றும் நகர்புற காற்று வெப்பநிலையை குறைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றன. வெப்ப தீவு விளைவு என்னும் விளைவைக் குறைக்கவும் இப்பசுமைக்கூரை உதவுகிறது. பசுங்கூரைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தடிமனாக இருக்கும் கூரை. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் மிகுதியாக வளர்க்கப்படும். மேலும் இது கனமாகவும் அதிக பராமரிப்பு தேவைப்படுவதாகவும் இருக்கும். மற்றொன்று மெல்லிய கூரை. இதில் சற்று குறைவான எண்ணிக்கையில் தாவரங்கள் வளர்க்கப்படும். மேலும் சிறிது இலகுவாகவும் இருக்கும்.
பசுங்கூரை என்ற சொல் ஏதேனும் பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கூரைகள், உதாரணமாக சூரிய வெப்ப சேகரிப்பான்கள் அல்லது ஒளிமின்னழுத்த பேனல்கள் கொண்ட குளிர் கூரை போன்ற கூரைகளையும் குறிக்கிறது.