ந. சங்கரய்யா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ந. சங்கரய்யா (N.Sankaraiah, 15 சூலை 1921 – 15 நவம்பர் 2023) நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.[2]
விரைவான உண்மைகள் தகைசால் தமிழர்ந. சங்கரய்யா, மாநிலக்குழு செயலாளர் ...
தகைசால் தமிழர் ந. சங்கரய்யா | |
---|---|
மாநிலக்குழு செயலாளர் | |
பதவியில் 1995–2002 | |
முன்னையவர் | ஏ.நல்லசிவன் |
பின்னவர் | என்.வரதராஜன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1921-07-15)15 சூலை 1921 ஆத்தூர், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு) |
இறப்பு | 15 நவம்பர் 2023(2023-11-15) (அகவை 102) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
![]() |
துணைவர் | நவமணி |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
பெற்றோர் | நரசிம்மலு-ராமானுஜம் |
கல்வி | இடைநிலை (வரலாறு) |
மூடு