நெல்லூர்
From Wikipedia, the free encyclopedia
நெல்லூர் (Nellore) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். மக்கள்தொகை அடிப்படையில் நெல்லூர் ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்[1]. பெண்ணாற்றின் [2] (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி ஆகும் [3]. மாவட்டத்தின் தலைநகரம், நெல்லூர் மண்டலம், நெல்லூர் வருவாய்க் கோட்டம் [4] என்ற பலவாறாக நெல்லூர் அறியப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் நெல்லூர் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. நெல்லூர் மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்கு தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நெல்லூர் வழியாக செல்லுகிறது.
விரைவான உண்மைகள் நெல்லூர், நாடு ...
நெல்லூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 14°26′33″N 79°59′11″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | நெல்லூர் மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 524 001 - 524 005 |
தொலைபேசி | +91-861 |
வாகனப் பதிவு | AP-26 |
மூடு