நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் (மலாய்:Senarai gabenor Negeri-Negeri Selat; ஆங்கிலம்:List of governors of the Straits Settlements; சீனம்: 海峽殖民地總督) என்பது 1826-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் நீரிணை குடியேற்றப் பகுதிகளுக்கு பிரித்தானிய ஆளுநர்களாகப் பதவி வகித்தவர்களைக் குறிப்பிடுவதாகும்.
1867-ஆம் ஆண்டு வரையில், நீரிணை குடியேற்றப் பகுதிகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் வரும் வரையில், அந்த ஆளுநர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டனர். 1942-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரையில் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில், நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பதவி நிரப்பப்படவில்லை.
1946-ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்தப் பதவி மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள் பதவி என பெயர் மாற்றம் கண்டது.[1]