நிலாத் தேட்டம்
From Wikipedia, the free encyclopedia
நிலாத் தட்டம் (exploration of the Moon) சோவியத் ஒன்றியம் ஏவிய உலூனா-2 விண்கலம் நிலாத் தரையின் மேற்பரப்பில் சென்று 1959 செடம்பர் 14 இல் மொத்தியதும் தொடங்கியது. அதற்கு முன்பான நிலா ஆய்வு புவியில் இருந்து மேற்கொண்ட நோக்கீடுகளாகவே இருந்தது. ஒளியியல் தொலைநோக்கியின் புதுமைப்புனனைவு நிலா நோக்கிடுகளின் பாய்ச்சலையே உருவாக்கியது. கலீலியோ கலிலி தான் முதலில் வானியலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார் என பொதுவாகக் கூறப்படுகிறது; அவர் தானே உருவாக்கிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி நிலாத் தரை மலைகளையும் மொத்தல் குழிகளையும் நோக்கினார். இவையே நிலா சார்ந்த முதல் கருவிவழி நோக்கீடுகளாகும்.
நாசாவின் அப்பொல்லோ திட்டம் வெற்றிகரமாக மந்தரை நிலாவில் ஆறுமுறை இறங்கவைத்த திட்டமாகும். முதல் முறையாக நிலாவில் அப்பொல்லோ-11 நிலாவில் இரு விண்பயணிகளுடன் இறங்கியது. அவர்கள் புசு ஆல்டிரினும் நீல் ஆர்ம்சுட்டிராங்கும் அவர்கள் நிலாவில் அறிவியல் கருவிகளை இறக்கிவிட்டு நிலாப் பதக்கூறுகளைப் புவிக்கு கொணர்ந்தனர்.
சீனா 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் சாங்கே 4 எந்திரன்கை விண்கலத்தின் யுது-2 எந்திரன் தரையூர்தி மெதுவாகத் நிலாத் தரையில் இறக்கியது.