நார்மன் ஏவொர்த்
பிரித்தானிய வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
சர் வால்டர் நார்மன் ஏவொர்த் (Sir Walter Norman Haworth) எஃப்ஆர்எஸ் [1] (19 மார்ச் 1883 - 19 மார்ச் 1950) ஒரு பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அஸ்கார்பிக் அமிலம் ( உயிர்ச்சத்து சி ) மீதான இவரது அற்புதமான பணிக்காக மிகவும் பிரபலமானவர். இவர் 1937 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "கார்போவைதரேட்டு மற்றும் உயிர்ச்சத்து சி பற்றிய ஆய்வுகளுக்காக" பெற்றார். இதர உயிர்ச்சத்துகள் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக சுவிஸ் வேதியியலாளர் பவுல் கரீர் உடன் இந்த நோபல் பரிசு பகிர்ந்து கொள்ளப்பட்டது.[2]
சர் நார்மன் ஏவொர்த் | |
---|---|
நார்மன் ஏவொர்த் | |
பிறப்பு | (1883-03-19)19 மார்ச்சு 1883 ஒயிட் காப்பிசு, லங்காசைர், இங்கிலாந்து |
இறப்பு | 19 மார்ச்சு 1950(1950-03-19) (அகவை 67) பார்ன்ட் கிரீன், வொர்செஸ்டெர்சைர், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் டர்ஹாம் பல்கலைக்கழகம் பர்மிங்காம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் காட்டிஞ்சென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இளைய வில்லியம் என்றி பெர்க்கின், ஓட்டோ வாலெக் |
அறியப்படுவது | கார்போவைதரேட்டுகள் மற்றும் உயிர்ச்சத்து சி தொடர்பான ஆய்வுப்பணிகள் |
விருதுகள் | டேவி பதக்கம் (1934) வேதியியலுக்கான நோபல் பரிசு (1937) இராயல் பதக்கம் (1942) |
ஏவொர்த் பல சர்க்கரைடுகளின் சரியான வடிமைப்பை யூகித்தறிந்து நிரூபணங்களையும் வழங்கினார். மேலும், முப்பரிமாண சர்க்கரை கட்டமைப்புகளை வசதியான இரு பரிமாண வரைகலை வடிவமாக மாற்றும் ஏவொர்த்தின் பணிக்காக கரிம வேதியியலாளர்களிடையே அறியப்பட்டவர்.