நாமகிரிப்பேட்டை
இந்தியாவின் அமைந்த மாநகரத்தில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் மனிதர்கள் குடியேற்றம் அ / From Wikipedia, the free encyclopedia
நாமகிரிப்பேட்டை (Namagiripettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நாமகிரிப்பேட்டை கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. இவ்வூரில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவ்வூரில் பிறந்தவர்.
நாமகிரிப்பேட்டை | |
அமைவிடம் | 11°28′N 78°16′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
வட்டம் | இராசிபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
21,250 (2011[update]) • 1,190/km2 (3,082/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
17.86 சதுர கிலோமீட்டர்கள் (6.90 sq mi) • 273 மீட்டர்கள் (896 அடி) |
குறிப்புகள்
|
அப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. இங்கு கோரையாறு ஆறு ஓடுகிறது. ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன.