நாப்பட்டா
From Wikipedia, the free encyclopedia
நாப்பட்டா பண்டைக்கால நூபியாவில் பாயும் நைல் நதியின் மேற்குக் கரையில் இருந்த ஒரு நகரம் ஆகும். இது தற்கால வடக்கு சூடான் நாட்டில் கரிமா நகர் இருக்கும் இடத்தில் இருந்தது. கிமு 8 தொடக்கம் 7 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் நூபிய இராச்சியமான குஷ் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. அக்காலத்தில் இந்த இராச்சியத்தை ஆண்ட வம்சத்தினர் எகிப்தைக் கைப்பற்றி 25-ஆம் வம்ச மன்னர்களாக ஆண்டனர். இவர்கள் எகிப்தின் நூபிய வம்சம் என அழைக்கப்படுகின்றனர். 25வது வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தை எகிப்தின் "நாப்பட்டாக் காலம்" எனவும் அழைப்பது உண்டு.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Kushite_necklace_spacer.jpg/220px-Kushite_necklace_spacer.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Jebel_barkal_rock.jpg/320px-Jebel_barkal_rock.jpg)