தொட்டபெட்டா
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டின் மிக உயரமான மலை தொட்டபெட்டா
தொட்டபெட்டா | |
---|---|
தொட்டபெட்டா | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,636 m (8,648 அடி) |
புடைப்பு | 2,256 m (7,402 அடி) |
ஆள்கூறு | 11°24′8.7″N 76°44′12.2″E |
புவியியல் | |
அமைவிடம் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு |
மூலத் தொடர் | நீலகிரி |
ஏறுதல் | |
எளிய வழி | தொட்டபெட்டா சாலை |
தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இதன் வழக்குச் சொற்கள் கருதத் தக்கவை. [1] இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.
தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.
தொட்டபெட்டா உச்சியில் வானாய்வுக்கூடமொன்று கி. பி. 1846-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கி. பி. 1859-இல் உதகமண்டலத்திற்கு ஒன்பது கல் தொலைவில் உள்ள இராணுவத்தாரின் தங்கல் இடமான வெல்லிங்டனுக்கு இது மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொட்டபெட்டாவிற்கே மாற்றப்பட்டது. ஆனால் இது இப்பொழுது பயன்படும் நிலையில் இல்லை. தொட்டபெட்டாவின் உச்சியிலிருந்து காண்போர் கண்களுக்கு உதகமண்டலத்தின் முழுக் காட்சியும் பேரழகோடு தென்படும். அதோடு கோவை மாவட்டத்திலுள்ள எல்லா மலைகளும் தென்படும்.[2]