தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் / From Wikipedia, the free encyclopedia
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீசிய மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், அடிப்படைத் தகவல்கள் ...
தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் | |
---|---|
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 10°40′48″N 79°50′59″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டு முறை |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
நிலை | பெருங்கோவில் (பசிலிக்கா) - (1962) |
செயற்பாட்டு நிலை | செயற்பாட்டில் உள்ளது |
இணையத் தளம் | http://www.vailankannishrine.net/ |
மூடு
இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.