![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Dina_Boluarte_October_2022_%2528cropped%2529.jpg/640px-Dina_Boluarte_October_2022_%2528cropped%2529.jpg&w=640&q=50)
தீனா பொலுவார்த்தே
From Wikipedia, the free encyclopedia
தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாரா (Dina Ercilia Boluarte Zegarra; பிறப்பு: 31 மே 1962) பெருவின் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2022 திசம்பர் 7 முதல் பெருவின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். அரசுத்தலைவர் பேதுரோ காசுத்தீலியோ பெருவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயன்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து துணைத் தலைவராகப் பதவியில் இருந்த தீனா பொலுவார்த்தே அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். பெருவின் அரசுத்தலைவரான முதல் பெண்மணி இவர் ஆவார்.
தீனா பொலுவார்த்தே Dina Boluarte | |
---|---|
![]() | |
பெருவின் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 திசம்பர் 2022 | |
முன்னையவர் | பேதுரோ காசுத்தீலியோ |
பெருவின் முதல் துணைத் தலைவர் | |
பதவியில் 28 சூலை 2021 – 7 திசம்பர் 2022 | |
குடியரசுத் தலைவர் | பேதுரோ காசுத்தீலியோ |
வளர்ச்சி மற்றும் சமூக உள்ளடக்க அமைச்சர் | |
பதவியில் 29 சூலை 2021 – 26 நவம்பர் 2022 | |
குடியரசுத் தலைவர் | பேதுரோ காசுத்தீலியோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாரா 31 மே 1962 (1962-05-31) (அகவை 62) சால்குவாங்கா, பெரு |
அரசியல் கட்சி | சுதந்திரப் பெரு (2022 இற்கு முன்னர்) சுயேச்சை (2022 முதல்) |
கல்வி | சான் மார்ட்டின் டி போரெசு பல்கலைக்கழகம் (இ.க. (சட்டம்)) |
கையெழுத்து | ![]() |
2007 முதல் பொலுவார்த்தே துணை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தேசிய அடையாள மற்றும் குடிமை நிலைப் பணியகத்தில் வழக்கறிஞராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.[1] லிமா நகர முதல்வர் பதவிக்கு சுதந்திரப் பெரு கட்சியின் வேட்பாளராக 2018 இல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2][3] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2][3]
2021 சூலையில் பேதுரோ காசுத்தீலியோவின் அமைச்சரவையில், அபிவிருத்தி, மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]
2022 திசம்பரில், பெருவின் அரசியல் நெருக்கடியின் போது, அரசுத்தலைவர் பேதுரோ காசுத்தீலியோ தனக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளின் போது பெருவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயன்றபோது, பொலுவார்த்தே இந்த நடவடிக்கையை "அரசியலமைப்பு ஒழுங்கின் முறிவு" என்று கண்டித்தார். காசுத்தீலியோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பொலுவார்த்தே பெருவின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார்.[5][6]