தி. க. சிவசங்கரன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
தி. க. சிவசங்கரன் (Thi. Ka. Sivasankaran, 30 மார்ச் 1925 – 25 மார்ச் 2014),[1][2][3] மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.
விரைவான உண்மைகள் தி. க. சிவசங்கரன், பிறப்பு ...
தி. க. சிவசங்கரன் | |
---|---|
பிறப்பு | திருநெல்வேலி கணபதி சிவசங்கரன் (1925-03-30)30 மார்ச்சு 1925 திருநெல்வேலி, தமிழ்நாடு |
இறப்பு | 25 மார்ச்சு 2014(2014-03-25) (அகவை 88) திருநெல்வேலி |
தேசியம் | இந்தியர் |
பணி | இதழாசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பிள்ளைகள் | வண்ணதாசன் |
மூடு