திருவள்ளுவர் விருது
From Wikipedia, the free encyclopedia
திருவள்ளுவர் விருது (Thiruvalluvar Award) என்பது பண்டைய கவிஞர்-தத்துவஞானி, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக இந்தியாவின் தமிழக மாநில அரசு வழங்கும் ஆண்டு விருது ஆகும். இந்த விருது திருக்குறள் இலக்கியத்திற்கும் அதன் தத்துவத்திற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது 1986ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், தமிழக அரசு திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்படும் தை மாதத்தின் 2வது நாளில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழ் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.[1]