தியனைரா
தொன்மவியல் மாந்தர் / From Wikipedia, the free encyclopedia
தியனைரா (Deianira, Deïanira, அல்லது Deianeira; பண்டைய கிரேக்கம் : Δηϊάνειρα, Dēiáneira, அல்லது Δῃάνειρα ) என்றழைக்கப்படுபவள் கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஒரு இளவரசி ஆவாள். இவளின் பெயரானது "மனிதனை-அழிப்பவள்" [1] அல்லது " கணவனை அழிப்பவள்" [2] [3] என பொருள் கூறப்படுகிறது. இவள் ஹெராக்லஸின் மனைவியாகவும், பிற்கால பாரம்பரிய கதைகளின்படி, தன் அறியாமையினால் நெசஸின் நச்சுத்தன்மையுள்ள சட்டையால் தன் கணவனைக் கொன்றாள் எனப்படுகிறது. சாபக்ளீசின் வுமன் ஆஃப் டிராச்சிஸ் நாடகத்தில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஆவாள்.