![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Meeting_with_tibetans.jpg/640px-Meeting_with_tibetans.jpg&w=640&q=50)
திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு (British expedition to Tibet), பிரித்தானிய இந்தியாவின் வணிகர்கள் திபெத் மற்றும் சிக்கிம் வழியாக பட்டுப் பாதை மூலம் இணைந்து சீனாவுடன் வணிகம் செய்ய திபெத்தியர்கள் தடை செய்ததால, பிரித்தானிய இந்தியா இராணுவம் திபெத் மீதான இப்படையெடுப்பு டிசம்பர் 1903-இல் துவங்கி, செப்டம்பர் 1904 வரை நீடித்தது.[2] 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் பர்மா மற்றும் சிக்கிம் கைப்பற்றிய பிறகு, பட்டுப் பாதையில் சீனாவுடன் பிரித்தானியர்கள் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், நடு ஆசியாவில் ருசியாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், சீனாவின் குயிங் ஆட்சியில் உள்ள திபெத்தை ஆக்கிரமிக்க பிரித்தானியப் பேரரசு திட்டம் வகுத்தது.[3]
திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() பிரித்தானிய மற்றும் திபெத்திய அதிகாரிகள் சந்திப்பு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | சீனாவின் குயிங் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() பிரான்சிஸ் யங் ஹஸ்பென்ட் | தபோன் டைலிங் 13-வது தலாய் லாமா |
||||||
பலம் | |||||||
3,000 படைவீரர்கள் 7,000 துணைப் படைவீரர்கள் | அறியப்படவில்லை, பல்லாயிரக்கணக்கான வேளாண் குடிகள் | ||||||
இழப்புகள் | |||||||
போர் வீரர்கள் 202 பிறர் 411 | 2,000–3,000 [1] |
ஏப்ரல் 1903-இல் ருசியா தனக்கு திபெத்தில் எவ்வித அரசியல் ஆதாயம் இல்லை என அதிகாரப்பூர்வமாக பிரித்தானியர்களுக்கு அறிவித்தது. இதனை அடுத்து இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபு திபெத்தை ஆக்கிரமிக்க படைகள் அனுப்பலாம் என பிரித்தானியப் பேரரசுக்கு தகவல் அனுப்பினார்.[4]
1904-இல் பிரித்தானியர்கள் திபெத்தின் தலைநகரம் லாசாவை கைப்பற்றிய பின்னர், திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர் 13-வது தலாய் லாமா வெளி மங்கோலியாவிற்கும், பின்னர் பெய்ஜிங்குற்கும் தப்பி ஓடினார். இதனால் திபெத்திய இராணுவ அதிகாரிகளுக்கும், பிரித்தானிய அரசியல் அலுவலர்களுக்கும் இடையே லாசா உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. [5][6][7]