தாவர நோயியல்
From Wikipedia, the free encyclopedia
தாவர நோயியல் (Plant pathology அல்லது phytopathology) என்பது நோய்க்கிருமிகள் (தொற்று உயிரினங்கள்) மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை (உடலியங்கியல் காரணிகள்) ஆகியவற்றால் தாவரங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.[1] தொற்று நோயை உருவாக்கும் உயிரினங்களில் பூஞ்சை, ஓமைசீட்ஸ், பாக்டீரியா, தீ நுண்மங்கள் ,வைரசனையங்கள், பைட்டோபிளாஸ்மாக்கள், முதலுயிரி, நூற்புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிச்செடு ஆகியன அடங்கும்.
தாவர இழையங்களை உட்கொள்வதன் மூலம் தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பூச்சிகள், சிற்றுண்ணிகள், முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் என்பன தாவர நோயியலில் உள்ளடக்கப்படவில்லை. தாவர நோயியல் நோய்க்கான காரணி, நோய் சுழற்சிகள், பொருளாதார தாக்கம், தாவர தொற்றுநோய்கள், தாவரங்களின் நோய் எதிர்ப்புதிறன் , தாவர நோய்கள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் விதம், நோய்க்கான மரபியல் அமைப்பு மற்றும் தாவர நோய்களை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.