தாமனும், பித்தியாசும்
சிரக்கூசாவின் பழம்பெரும் நண்பர்கள் / From Wikipedia, the free encyclopedia
தாமனின் கதை (Damon (/ˈdeɪmən/; கிரேக்கம்: Δάμων, gen. Δάμωνος) மற்றும் Pythias (/ˈpɪθəs/; பண்டைக் கிரேக்கம்: Πυθίας அல்லது பண்டைக் கிரேக்கம்: Φιντίας; அல்லது Phintias, /ˈfɪntiəs/) என்பது பண்டைய கிரேக்க வரலாற்று எழுத்துக்களில் உள்ள ஒரு தொன்மக்கதையாகும். இது நட்பின் மேன்மையை விளக்குகிறது. சிரக்கூசாவின் சர்வாதிகாரியான தியோனீசியசுக்கு எதிராக சதி செய்ததாக பித்தியாசு மீது குற்றம் சாட்டப்படுகிறது. பித்தியாசு தனது கடமைகள் சிலவற்றை முடித்துவர அனுமதிக்குமாறு தியோனீசியசைக் கோருகிறார். பிதியாசின் நண்பனான தாமன் பிணைக் கைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தியோனீசியசு அதற்கு ஒப்புக்கொள்கிறார். அதன்படி பித்தியாசு திரும்பி வராவிட்டால், அவருக்குப் பதிலாக தாமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதாகும். சரியான நேரத்தில் பித்தியாசு திரும்பி வருகிறார். அவர்களின் நட்பில் உள்ள அன்பையும் நம்பிக்கையையும் கண்டு வியந்த தியோனிசியசு அவர்கள் இருவரையும் விடுவிக்கிறார்.