தாகியா காசெம்
From Wikipedia, the free encyclopedia
தாகியா காசெம் (ஆங்கிலம்: Tahia Kazem; அரபு மொழி: تحية كاظم ; 1 மார்ச் 1920 [1] - 25 மார்ச் 1992) தாகியா அப்தெல் நாசர் என அழைக்கப்படும் இவர் 23 சூன் 1956 முதல் 28 செப்டம்பர் 1970[1] வரை எகிப்தின் முதல் பெண்மணியாக இருந்தார். இவர் 1944-ல் ஜனாதிபதி ஜமால் அப்துல் நாசிரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
விரைவான உண்மைகள் தாகியா காசெம், முதல் சீமாட்டி எகிப்து ...
தாகியா காசெம் | |
---|---|
முதல் சீமாட்டி எகிப்து | |
In role சூன் 23, 1956 – செப்டம்பர் 28, 1970 | |
குடியரசுத் தலைவர் | ஜமால் அப்துல் நாசிர் |
முன்னையவர் | ஆயிஷா லபீப் |
பின்னவர் | ஜெஹான் சதாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1920-03-01)மார்ச்சு 1, 1920 கெய்ரோ, எகிப்து |
இறப்பு | மார்ச்சு 25, 1992(1992-03-25) (அகவை 72) கெய்ரோ, எகிப்து |
தேசியம் | எகிப்தியர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
துணைவர்(கள்) | |
பிள்ளைகள் | 5, காலித் அப்தெல் நாசர் |
மூடு