தம்தமா ஏரி
From Wikipedia, the free encyclopedia
தம்தமா ஏரி (Damdama Lake) இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள குர்கான் மாவட்டத்தில் குருகிராமுக்கு அருகில் சோனாவில் அமைந்துள்ள ஓர் ஏரி.[1] இது அரியானாவில் உள்ள சிறிய ஏரிகளில் ஒன்றாகும். 3,000 ஏக்கர் (12.14 கிமீ 2) பரப்பளவில், 1947 ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்புக்காக பிரித்தானியர்கள் கல்லாலும் மண்ணாலும் கட்டிய அணையினால் தம்தமா ஏரி உருவாக்கப்பட்டது.[2] கட்டுக்கரையைக் கொண்டுள்ள இந்த ஏரிக்கான முதன்மை நீர்வரத்து ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள தாழியில் விழும் பருவகால மழையேயாகும். ஏரியின் நீர்மட்டம் 20 அடி (6. 1 மீ)யாகக் குறையும் போதும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து உள்ளது. பருவமழையின் போது நீர்மட்டம் 50 அடி (15 மீ) முதல் 70 அடி (21 மீ) வரை உயர்கின்றது. கோடைக்காலங்களில் இந்த ஏரி வறண்டுவிடுகின்றது.[3]
விரைவான உண்மைகள் தம்தமா ஏரி, அமைவிடம் ...
தம்தமா ஏரி | |
---|---|
தம்தமா ஏரியில் உள்ள அரியானா சுற்றுலாத்துறையின் விடுதி | |
அமைவிடம் | சோனா, குர்கான் மாவட்டம், அரியானா, இந்தியா |
ஆள்கூறுகள் | 28.304°N 77.129°E / 28.304; 77.129 |
வகை | நீர்த்தேக்கம் |
பூர்வீக பெயர் | दमदमा झील Error {{native name checker}}: parameter value is malformed (help) |
வடிநில நாடுகள் | இந்தியா |
கட்டியது | 1947 |
மூடு