தண்டையார்பேட்டை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
தண்டையார்பேட்டை (Tondiarpet) அல்லது தொண்டியார்பேட்டை ஆனது இந்திய மாநகரம், சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும், முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வங்கிகளின் கிளைகளும் பள்ளிகளும் உள்ளன. மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள்
தண்டையார்பேட்டை | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
மூடு