ஜொகூர் சுல்தான் அபு பக்கர்
From Wikipedia, the free encyclopedia
சுல்தான் அபு பக்கர் அல்லது ஜொகூர் சுல்தான் அபு பக்கர்; (ஆங்கிலம்: Abu Bakar of Johor அல்லது Sultan Sir Abu Bakar Al-Khalil Ibrahim Shah; மலாய்: Sultan Sir Abu Bakar Al-Khalil Ibrahim Shah ibni Almarhum Temenggong Seri Maharaja Tun Daeng Ibrahim Al-Aydarus); (பிறப்பு: 3 பிப்ரவரி 1833; இறப்பு: 4 சூன் 1895) என்பவர் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் தெமாங்கோங் ஆவார். இவர் நவீன ஜொகூரின் 1-ஆவது சுல்தான்; ஜொகூர் மாநிலத்தின் 21-ஆவது சுல்தான்; மற்றும் தெமாங்கோங் வம்சாவளியில் ஜொகூர் மாநிலத்தின் முதல் மகாராஜா ஆவார்.[1][2]
ஜொகூர் சுல்தான் அபு பக்கர் Sultan Abu Bakar Daeng Ibrahim Sultan Abu Bakar of Johor سلطان عزلن محب الدين شاه | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஜொகூர் சுல்தான் அபு பக்கர் | |||||||||
ஜொகூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 13 பிப்ரவரி 1886 - 4 சூன் 1895 | ||||||||
மலேசியா | 29 சூலை 1886 | ||||||||
முன்னையவர் | ஜொகூர் சுல்தான் அலி இசுகந்தர் சா (Sultan Ali Iskandar Shah) | ||||||||
பின்னையவர் | ஜொகூர் சுல்தான் இப்ராகிம் (Sultan Ibrahim of Johor) | ||||||||
ஜொகூர் மகாராஜா | |||||||||
ஆட்சிக்காலம் | 30 சூன் 1868 - 12 பிப்ரவரி 1886 | ||||||||
முன்னையவர் | தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் (Temenggong Daeng Ibrahim) | ||||||||
பின்னையவர் | ஜொகூர் சுல்தான் | ||||||||
ஜொகூர் தெமாங்கோங் | |||||||||
ஆட்சிக்காலம் | 2 பிப்ரவரி 1862 - 29 சூன் 1868 | ||||||||
முன்னையவர் | தெமாங்கோங் டாயிங் இப்ராகிம் | ||||||||
பின்னையவர் | ஜொகூர் மகாராஜா (Maharaja of Johor) | ||||||||
பிறப்பு | (1833-02-03)3 பெப்ரவரி 1833 இசுதானா லாமா, தெலுக் பெலாங்கா, சிங்கப்பூர், நீரிணை குடியேற்றங்கள் | ||||||||
இறப்பு | 4 சூன் 1895(1895-06-04) (அகவை 62) பெய்லி விடுதி, தெற்கு கென்சிங்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம் | ||||||||
புதைத்த இடம் | 7 செப்டம்பர் 1895 அரச கல்லறை, ஜொகூர் பாரு, ஜொகூர் | ||||||||
துணைவர் |
| ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | தெமாங்கோங் | ||||||||
தந்தை | தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் | ||||||||
தாய் | சிக் நகா | ||||||||
மதம் | இசுலாம் |
19-ஆம் நூற்றாண்டில், ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சுல்தான் அபு பக்கரின் தலைமைத்துவம் சிறப்பான அங்கீகாரம் வழங்கியதால், சுல்தான் அபு பக்கர் நவீன ஜொகூரின் தந்தை (The Father of Modern Johor) என்று அழைக்கப்படுகிறார். ஜொகூர் மாநிலத்தின் வேளாண் துறையில் வளர்ச்சியைக் கொண்டு வரும் நோக்கத்தில், சீன இனத் தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்கினார். சீன மக்கள் 1840-களில் தென்நடு சீனாவிலிருந்து ஜொகூருக்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேளாண் துறைகளில் ஈடுபட்டனர்.
ஜொகூர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, நிர்வாக அமைப்பு, இராணுவம் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும், சுல்தான் அபு பக்கர் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். ஜொகூர் மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டன.[3]