ஜேத்தவனராமயா
இது ஒரு நல்ல கட்டிடம். இலங்கையின் கட்டிட வேலைகளை பிரதிபலிக்கிறது From Wikipedia, the free encyclopedia
இது ஒரு நல்ல கட்டிடம். இலங்கையின் கட்டிட வேலைகளை பிரதிபலிக்கிறது From Wikipedia, the free encyclopedia
ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம் நகரத்தின் சிதலமடைந்த ஜேத்தவனத்தின் மகாவிகாரையில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இது பன்னாட்டு பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.
ஜேத்தவனராமயா Jetavanaramaya | |
---|---|
ජේතවනාරාමය | |
ஜேத்தவனராமயா தூபி | |
முந்திய பெயர்கள் | தேனநகா, தேனவிகாரம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | தூபி |
இடம் | அனுராதபுரம், ஸ்ரீலங்கா |
உயரம் | 122 m (400 அடி) |
பரிமாணங்கள் | |
பிற பரிமாணங்கள் | 233,000 m2 (2,508,000 sq ft) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 5.6 ஹெக்டர்கள் |
சிதிலமடைந்த மகாவிகாரையில், அனுராதபுரத்தின் மன்னர் மகாசேனன் (273–301) கட்டத் துவங்கியத் இத்தூபியை, அவரது மகன் முதலாம் மகாசேனர் கட்டி முடித்தார்.[1].
இப்பௌத்த கட்டிட அமைப்பு, இலங்கையின் தேரவாதம் மற்றும் மகாயானப் பௌத்தப் பிரிவினர்களிடையே இருந்த பிணக்குகளை வெளிப்படுத்துகிறது. இத்தூபி பண்டைய வரலாற்று உலகின் உயரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது.[2] பிரமிடு அல்லாத கட்டிடங்களில் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்க மண்டபத்திற்கு அடுத்து, இத்தூபி 400 அடி (122 மீட்டர்) உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2,33,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] இத்தூபி 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.
இதன் வளாகம் 5.6 எக்டேர் பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் 10,000 பிக்குகள் தங்கி பௌத்தக் கல்வியைப் பயில்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.