![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/Bikaner_fort_view_08.jpg/640px-Bikaner_fort_view_08.jpg&w=640&q=50)
ஜுனாகாத் கோட்டை
இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டை / From Wikipedia, the free encyclopedia
ஜுனாகாத் கோட்டை (Junagarh Fort) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் உள்ளது. இக்கோட்டை முன்னாளில் சிந்தாமணி என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில், இக்கோட்டையில் வாழ்ந்த அரசு குடும்பத்தினர் லால்கட் அரண்மனைக்கு குடிபெயர்ந்த போது, இக்கோட்டைக்கு 'பழைய கோட்டை' என்று பொருள்படும் ஜுனாகாத் என்ற பெயர் ஏற்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பல கோட்டைகள் மலைமேல் கட்டப்பட்டவை. ஆனால், இக்கோட்டை சமதள நிலப்பரப்பில் கட்டப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிகானேர் நகரத்தின் வரலாற்றில் இக்கோட்டை முக்கிய பங்கைப் பெறுகிறது.[1][2][3]
ஜுனாகாத் கோட்டை | |
---|---|
பிகானேர், இந்தியா | |
![]() | |
கோட்டையின் முகப்பு | |
![]() | |
ஆள்கூறுகள் | 28.02°N 73.32°E / 28.02; 73.32 |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | ராஜஸ்தான் அரசு |
மக்கள் அனுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1589-1594 |
கட்டியவர் | கரண் சந்த் (ராஜா ராய் சிங் முன்னிலையில்) |
கட்டிடப் பொருள் |
சிவப்பு மணற்கல் மார்பிள் |
பிகானேரின் ஆறாம் அரசரான ராஜா ராஜ் சிங் அவர்கள் இவ்வூரை 1571 முதல் 1611ஆம் ஆண்டு வரை ஆண்டார். அவரது அமைச்சரான கரண் சிங்கின் மேற்பார்வையில் இக்கோட்டை கட்டப்பட்டது. 1589ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்டிட வேலை, 1594ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தற்போதைய பிகானேர் நகரத்தின் நடுவிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. இக்கோட்டையின் இடிபாடுகள் லட்சுமி நாராயணன் கோயிலுக்கருகில் பாதுகாக்கப்படுகின்றன.[1][4][5]
பல முறை பல எதிரிகள் கைப்பற்ற முயன்றும் அவர்களின் ஆளுகைக்குள் இக்கோட்டை வரவில்லை. ஒரே ஒரு நாள் மட்டும் கம்ரான் மிர்சா என்ற மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவர் முகலாய மன்னரான பாபரின் இரண்டாவது மகன்.[6]
கிட்டத்தட்ட 5.28 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் அரண்மனையும் கோயிலும் அமைந்துள்ளன.[2] இக்கோட்டை பல்வேறு கட்டிடக்கலை நுணுக்கங்களை உள்ளடக்கியது.[3][7]