ஜாவேத் அக்தர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற உருது எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜாவேத் அக்தர் (Javed Akhtar), (ஜனவரி 17, 1945 ) இந்தியாவைச் சேர்ந்த ஒரு உருது மொழி கவிஞரும், பாடலாசிரியரும் திரைக்கதையாசிரியரும் ஆவார். இவருடைய வெற்றிகரமான எழுத்துப்பணிகள் 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் சலீம் கான் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டவை. இரட்டையர்களான இவர்கள் சலீம்-ஜாவேத் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் இவரது பணிக்காக அறியப்பட்ட இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருதுகளை ஐந்து முறையும், சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதை எட்டு முறையும் வென்றுள்ளார்.[1] மேலும் 1999 இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்மசிறீ, 2007 இல் பத்ம பூசண் ஆகிய இரண்டையும் பெற்றார்.[2] 2013 இல், லாவா என்ற கவிதைத் தொகுப்பிற்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த இலக்கிய விருதான உருது மொழியில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[3]
ஜாவேத் அக்தர் | |
---|---|
2012 இல் அக்தர் | |
பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 22 மார்ச்சு 2010 – 21 மார்ச்சு 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சனவரி 1945 (1945-01-17) (அகவை 79) குவாலியர், குவாலியர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போதைய மத்தியப் பிரதேசம், இந்தியா) |
தேசியம் | Indian |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
கல்வி | கால்வின் தலூக்தார் கல்லூரி, இலக்னோ |
வேலை |
|
கையெழுத்து | |
1973 இன் சன்ஜீர் மூலம் திரைக்கதை எழுத்தாளராக தனது திருப்புமுனையைப் பெற்றார். இவர் 1975 இல் வெளியான தீவார் மற்றும் ஷோலே ஆகிய திரைப்படங்களுக்கும் எழுதினார்.
அக்தர் குறிப்பாக 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) மற்றும் அவர்களின் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தார். மேலும் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[4] இவரது பணிக்காக, 2020 இல் இரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப் பெற்றார்.[5][6] [6][7][8]