ஜமுய்
From Wikipedia, the free encyclopedia
ஜமுய் என்பது இந்திய மாநிலமான பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஜமுய் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகம் ஆகும். 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று முங்கேர் மாவட்டத்தில் இருந்து பிரிந்ததன் பின்னர் ஜமுய் ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மகாபாரத போரின் காலத்திலிருந்து ஜமுயின் வரலாற்று இருப்பு அறியப்படுகின்றது. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகள் சமண பாரம்பரியத்துடன் அதன் நெருங்கிய நீண்ட காலமாக தொடர்பைக் காட்டுகின்றன. இந்த பகுதியின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது.