![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/A_seated_portrait_of_Sayyid_Abdullah_Khan_holding_court_Early_18th_century_The_British_Museum.jpg/640px-A_seated_portrait_of_Sayyid_Abdullah_Khan_holding_court_Early_18th_century_The_British_Museum.jpg&w=640&q=50)
சையத் சகோதரர்கள்
From Wikipedia, the free encyclopedia
சையத் சகோதரர்கள் (Sayyid brothers) என்பவர்கள் சையத் அசன் அலி கான் பர்கா மற்றும் சையத் உசைன் அலி கான் பர்கா என்னும் இரு சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஈராக்கில் உள்ள வாசித் என்னும் இடத்தைச் சேர்ந்த அப்துல் ஃபாரா என்பவரின் வழிவந்தோராவர்.[1] பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் ஃபாராவும் அவரது 12 ஆண் மக்களும், முகலாயப் பேரரசுக்கு வந்து பட்டியாலாவுக்கு அருகில் உள்ள நான்கு ஊர்களில் குடியேறினர்.[2] காலப்போக்கில் இந் நான்கு ஊரிகளிலும் குடியேறிய இவர்களது வழிவந்தோர் அவ்வூர்களின் பெயரைப் பெற்ற நான்கு தனித்தனிக் கிளைகள் ஆயினர். பின்னர் இவர்கள் யமுனை ஆற்றைக் கடந்து, மீரட்டுக்கும் சகாரன்பூருக்கும் இடையே குடியிருப்புக்களை ஏற்படுத்தினர்.[3] இப்பகுதிகள் வளமற்ற மணற் பகுதிகளாக இருந்தன. அக்காலத்தில் இப்பகுதிகளில் மிகக் குறைவான மக்களே வாழ்ந்திருக்கக் கூடும்.
பேரரசர் அக்பர் காலத்தில் இருந்து வீரமும், துணிவும், கர்வமும், ஆடம்பரத்தன்மையும் கொண்ட இக் குலத்தைச் சேர்ந்தவர்கள் புகழ் பெற்ற படைத் தலைவர்களாக இருந்தனர். இத்துணிவு காரணமாக முகலாயரின் முன்னணிப் படைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்லும் மரபு வழி உரிமை இவர்களுக்குக் கிடைத்தது. 1707 இல் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு சகோதரர்கள் முகலாய நீதிமன்றத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றனர் மற்றும் அவர்கள் பேரரசர்களை உருவாக்கி உருவாக்கத் தொடங்கியபோது பேரரசின் உண்மையான இறையாண்மைகளாக ஆனார்கள்.[4][5]