![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/640px-Chera_emblem.jpg&w=640&q=50)
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
From Wikipedia, the free encyclopedia
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். [1] இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர்.[2] சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/320px-Chera_emblem.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Map_of_Chera_Country.jpg/640px-Map_of_Chera_Country.jpg)
சேர மன்னர்களின் பட்டியல் | |
---|---|
![]() | |
கடைச்சங்க காலச் சேரர்கள் | |
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் | பொ.ஊ. 45-70[சான்று தேவை] |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | பொ.ஊ. 71-129[சான்று தேவை] |
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | பொ.ஊ. 80-105[சான்று தேவை] |
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | பொ.ஊ. 106-130[சான்று தேவை] |
சேரன் செங்குட்டுவன் | பொ.ஊ. 129-184[சான்று தேவை] |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | பொ.ஊ. 130-167[சான்று தேவை] |
அந்துவஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
மாந்தரஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
வாழியாதன் இரும்பொறை | பொ.ஊ. 123-148[சான்று தேவை] |
குட்டுவன் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
பெருஞ்சேரல் இரும்பொறை | பொ.ஊ. 148-165[சான்று தேவை] |
இளஞ்சேரல் இரும்பொறை | பொ.ஊ. 165-180[சான்று தேவை] |
பெருஞ்சேரலாதன் | பொ.ஊ. 180[சான்று தேவை] |
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
குட்டுவன் கோதை | பொ.ஊ. 184-194[சான்று தேவை] |
மாரிவெண்கோ | காலம் தெரியவில்லை |
வஞ்சன் | காலம் தெரியவில்லை |
மருதம் பாடிய இளங்கடுங்கோ | காலம் தெரியவில்லை |
கணைக்கால் இரும்பொறை | காலம் தெரியவில்லை |
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை | காலம் தெரியவில்லை |
பிற்காலச் சேரர்கள் | |
பெருமாள் பாசுகர ரவிவர்மா | பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு |
edit |
ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார்.[3]
இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர்.
பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[4]