![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Mars_Orbiter_Mission_-_India_-_ArtistsConcept.jpg/640px-Mars_Orbiter_Mission_-_India_-_ArtistsConcept.jpg&w=640&q=50)
செவ்வாய் சுற்றுகலன் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan)[9][10] என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவிய ஆளில்லாத விண்கலம் ஆகும்.[11][12][13][14][15]
![]() செவ்வாய்க் கோளைச் சுற்றும் மங்கள்யான் (ஓவியரின் கைவண்ணத்தில்) | |
திட்ட வகை | செவ்வாய் சுற்றுக்கலன் |
---|---|
இயக்குபவர் | இசுரோ |
காஸ்பார் குறியீடு | 2013-060A |
சாட்காட் இல. | 39370 |
இணையதளம் | www |
திட்டக் காலம் | 6 மாதங்கள் (திட்டத்தில்)[1] |
விண்கலத்தின் பண்புகள் | |
செயற்கைக்கோள் பேருந்து | I-1K[2] |
தயாரிப்பு | ஐசாக் |
ஏவல் திணிவு | 1,337 கிகி (2,948 இறா)[3] |
உலர் நிறை | 500 கிகி (1,100 இறா) |
ஏற்புச்சுமை-நிறை | 15 கிகி (33 இறா)[4] |
பரிமாணங்கள் | 1.5-மீட்டர் (4 அடி 11 அங்) கனசதுரம் |
திறன் | 840 வாட்டுகள்[2] |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 5 நவம்பர் 2013, 09:08 ஒசநே[5] |
ஏவுகலன் | PSLV-XL சி25[6] |
ஏவலிடம் | சதீஸ் தவான் |
ஒப்பந்தக்காரர் | இசுரோ |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | செவ்வாய் மையம் |
அண்மைareon | 365.3 கிமீ (227.0 மை) |
கவர்ச்சிareon | 80,000 கிமீ (50,000 மை) |
சாய்வு | 150.0° [7] |
சுற்றுக்காலம் | 76.72 மணி |
Epoch | திட்டத்தில் |
செவ்வாய் சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | 24 செப்டம்பர் 2014, 02:00 ஒசநே MSD 50027 06:27 AMT[8] |
இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் வட்டணையில் வெற்றிகரமாக இணைந்தது. இதனால், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.[16][17][18][19] இத்திட்டத்திற்காக முப்பத்து நான்காவது பன்னாட்டு விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது சிறந்த விண்வெளி முன்னோடி விருதினை இசுரோவிற்கு தரவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
செவ்வாய் சுற்றுக்கலன் முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV) சி25 வழி ஆந்திரப் பிரதேசம், சிறீ அரிகோட்டாவில் இருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.[20] இக்கலன் புவியின் வட்டணையில் வட்டணை உயர்த்த, ஒரு மாதம் வரை தங்கியிருந்த பின்னர், 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கிச் செலுத்தப்பட்டது.[21]
இத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாகச் செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை இசுரோ பெற்றது.[22][23] விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இசுரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்திய ஆழ்வெளி வலைப்பிணைய (IDSN) உணர்நீட்சி வழியாகக் கண்காணிக்கப்படுகிறது.[24]