![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Deutschland_Bundeslaender_1957.png/640px-Deutschland_Bundeslaender_1957.png&w=640&q=50)
செருமானிய மீளிணைவு
From Wikipedia, the free encyclopedia
செருமானிய மீளிணைவு (இடாய்ச்சு மொழி: Deutsche Wiedervereinigung); (ஆங்:German reunification) என்பது 1990இல் செருமானிய மக்கள் குடியரசு (கிழக்கு செருமனி) செருமனி கூட்டாட்சிக் குடியரசோடு (மேற்கு செருமனி) இணைந்ததையும், பெர்லின் நகரம் ஒரே நகரமாக மீண்டும் இணைந்ததையும் குறிக்கின்ற நிகழ்ச்சி ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Deutschland_Bundeslaender_1957.png/320px-Deutschland_Bundeslaender_1957.png)
இந்த மீளிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் "திருப்புமுனை" (இடாய்ச்சு மொழி: die Wende) (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை "செருமானிய ஒற்றுமை" (இடாய்ச்சு மொழி: Deutsche Einheit) (ஆங்:German unity) என்று கூறி, அதை அக்டோபர் 3ஆம் நாள் கொண்டாடுகின்றனர்.[1]
அங்கேரியின் எல்லை வேலிகள் நீக்கப்பட்டு இரும்புத் திரையில் துளை விழுந்த மே 1989இல் கிழக்கு செருமனியின் ஆட்சி ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான கிழக்கு செருமானியர்கள் அங்கேரி வழியாக ஆத்திரியாவிற்கும் மேற்கு செருமனிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். கிழக்கு செருமானியர்களின் தொடர்ந்த போராட்டங்கள், அமைதியான புரட்சி, மார்ச்சு 18, 1990இல் கிழக்கு செருமனியில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு/மேற்கு செருமனிகளுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களின் பயனாக ஒன்றிணைப்பு ஒப்பந்தமும்[1] இரு செருமனிகளுக்கும் அவற்றை ஆக்கிரமித்திருந்த நான்கு அரசுகளுக்குமிடையே இரண்டுடன் நான்கு ஒப்பந்தமும் கையொப்பமாயின. இவை ஒன்றிணைந்த செருமனிக்கு முழு இறையாண்மையை வழங்கின. ஒன்றிணைந்த செருமனி ஐரோப்பிய சமூகத்திலும் (பின்னர் ஐரோப்பிய ஒன்றியம்) நேட்டோவிலும் உறுப்பினராக தொடர்ந்தது.