செயற்கை நுண்ணறிவின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
செயற்கை நுண்ணறிவின் வரலாறு (History of artificial intelligence) பழங்காலத்தில் தொடங்கியது. புனைவுக் கதைகளும் திறமிகு கைவினைஞர்களால் நுண்ணறிவு அல்லது நனவைக் கொண்ட செயற்கை உயிரினங்களின் வதந்திகளும் இதைத் தொடங்கி வைத்தன.நவீனச் செயற்கை நுண்ணறிவின் விதைகள் மனித சிந்தனையின் நிகழ்வை இயந்திரமுறையில் குறிகளால் கையாளுதல் என்று விவரிக்க முயன்ற மெய்யியலாளர்களால் விதைக்கப்பட்டன. 1940 களில் நிரல்படுத்தக்கூடிய இலக்கவியல் கணினி கண்டுபிடிப்பில் இந்த வேலை உச்சக்கட்டத்தை அடைந்தது. இது கணிதப் பகுத்தறிவின் சுருக்கமான சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எந்திரம். இந்த கணினியும் அதன் பின்னணியில் உள்ள சிந்தனை நிரல்களும் ஒரு சில விஞ்ஞானிகளை மின்னனியல் மூளையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முனைப்பாக விவாதிக்கத் தூண்டின.
1956 கோடையில் அமெரிக்காவின் தார்த்துமவுத் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற ஒரு பட்டறையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சித் துறை நிறுவப்பட்டது.[1] இதில் கலந்து கொண்டவர்கள், பிறகு பல பத்தாண்டுகளாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களில் பலர் ஒரு மனிதனைப் போன்ற புத்திசாலித்தனமான ஒரு எந்திரம் உருவாக ஒரு தலைமுறைக்கு மேல் ஆகாது என்று கணித்தனர் , மேலும் இந்த பார்வையை நனவாக்க அவர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்பட்டன.[2]
வணிக மேம்பாட்டாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் திட்டத்தின் சிரமத்தை மிகக் குறைவாக மதிப்பிட்டுள்ளனர் என்பது இறுதியில் தெளிவாகியது.[3] 1974 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் லைட்கில்லின் விமர்சனமும் பேராயத்தின் தொடர் அழுத்தமும் தரவே , ஐக்கிய அமெரிக்க அரசும் பிரித்தானிய அரசும் செயற்கை நுண்ணறிவு குறித்த மீள்வரவிலாத த ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதை நிறுத்தின. அதைத் தொடர்ந்து வந்த கடினமான ஆண்டுகள் பின்னர் " முதல் செநு குளிர்காலம் " எனப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு , ஜப்பானிய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட முன்முயற்சி , செயற்கை நுண்ணறிவை பில்லியன் கணக்கான டாலர்களை வழங்க அரசாங்கங்களையும் தொழில்துறையையும் ஊக்கப்படுத்தியது , ஆனால் 1980 களின் பிற்பகுதியில் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே மீண்டும் நிதியை திரும்பப் பெற்றனர். இது இரண்டாம் செநு குளிர்காலம் எனப்பட்டது.
21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவில் முதலீடும் ஆர்வமும் வளர்ந்தன. திறன்மிக்க கணினி வன்பொருளின் பயன்பாடும் செறிவான தரவுத் தொகுப்புகளின் திரட்டலும் ஆகிய புதிய முறைகள் காரணமாக கல்வியிலும் தொழில்துறையிலும் உள்ள பல சிக்கல்களுக்கு எந்திர கற்றல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது..