![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Chennai_suburban_rail_and_bus_interconnectivity_map.png/640px-Chennai_suburban_rail_and_bus_interconnectivity_map.png&w=640&q=50)
சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் ஆகும். நாட்டின் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாகவும் விளங்குகிறது. இங்கு விரிவான புறநகர் தொடருந்து நிலையங்கள் உள்ளது. 40 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளது.[1] சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றும் தாம்பரம் தொடருந்து நிலையம் ஆகிய மூன்று தொடர்வண்டி முனையங்கள் உள்ளன. இந்தியாவில் ஐந்து பெரிய தொடர்வண்டி நிலையங்களில ஒன்று சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Chennai_suburban_rail_and_bus_interconnectivity_map.png/640px-Chennai_suburban_rail_and_bus_interconnectivity_map.png)
சென்னையில் கட்டப்பட்ட முதல் தொடருந்து நிலையம் 1855 ம் ஆண்டு கட்டப்பட்ட ராயபுரம் நிலையம் ஆகும்.[2][3] மேலும் இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மிகப் பழமையான தொடருந்து நிலையமும் இதுதான்.[4] 1907 வரை இந்நிலையமே சென்னையின் முதன்மை நிலையமாக இருந்தது.[5] ராயபுரம் நிலையம் 1856இல் தொடங்கியிருந்தாலும் 1840 ஆம் ஆண்டுகளில் இருந்து ரயில் தடங்கள் இருந்து வந்துள்ளது. ராயபுரம் ரயில் நிலையம் முன்பிருந்த மெட்ராஸ் ரயில் கம்பெனியால் (Madras Rail Company) கட்டப்பட்டது.[5] அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு இதனை திறந்து வைத்தார். முதல் பயணமாக ராயபுரத்திலிருந்து ஆற்காடு நவாப்புகளின் தலைமையிடமாக இருந்த ஆறகாட்டுக்கு இயக்கப்பட்டது.[6] 1873இல் மெட்ராஸ் மத்திய ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையம் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு மிகுந்த போட்டியாக அமைந்தது.[7] இதன் பின் எழுப்பூர் தொடருந்து நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையம் 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துறைமுகத்திற்கு அதிகமான சரக்குகள் போக்குவரைத்தை சமாளிக்க இந்நிலையம் தொடங்கப்பட்டது.