சூலு சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
சூலு சுல்தானகம் (ஆங்கிலம்: Sultanate of Sulu Dar al-Islam)[1] என்பது சூலு கடல், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதித் தீவுகள், போர்னியோவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இசுலாமிய தவுசூக் மக்களின் இறைமையுள்ள நாடு ஆகும். இச்சுல்தானகம் 1457 ஆம் ஆண்டில்[2] ஜொகூரில் பிறந்த அரபு நாடுகாண் பயணியும், இசுலாமியக் கல்விமானுமான சய்யிது அபூபக்கர் அபிரின் (சூலுவின் சரிப் உல்-அசீம்) (Sayyed walShareef Abubakar Abirin AlHashmi.) என்பவரால் உருவாக்கப்பட்டது.
1457–1917 | |
கொடி | |
தலைநகரம் | ஜோலோ, சூலு |
பேசப்படும் மொழிகள் | அரபு மொழி (அதிகாரபூர்வம்), தவுசூக், மலாயு, பங்கூங்கி, பசாவு மொழிகள் |
சமயம் | இசுலாம் |
அரசாங்கம் | முடியாட்சி |
சுல்தான் | |
• 1457–1480 | சரீப் உல்-அசீம் |
• 1480-1505 | கமலுத்-தின் |
• 1505-1527 | அமிருல்-உமாரா |
• 1884–1899 | ஜமா உல்-கிராம் I |
வரலாறு | |
• தொடக்கம் | 1457 |
• சுல்தானகம் கலைப்பு | 1917 |
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா மலேசியா பிலிப்பைன்சு |
அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி (Paramisuli) என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் (Paduka Mahasari Maulana al Sultan Sharif ul-Hashim) என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.
இந்த சுல்தானகம் தற்போது எந்த நாட்டாலும் இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், சூலு சுல்தான் அல்லது வடக்கு போர்னியோவின் சுல்தான் எனப் பலர் உரிமை கோரி வருகின்றனர்.
2013-ஆம் ஆண்டில், மூன்றாம் ஜமாலுல் கிராம் சுல்தான் (Sultan Jamalul Kiram) எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் தலைமையில் சில பிலிப்பீன்சு குழு ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாட் டத்துவுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசப் படுத்தியுள்ளனர்.[3]