![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/1402_The_Tongue.jpg/640px-1402_The_Tongue.jpg&w=640&q=50)
சுவை அரும்பு
புலனங்கம் / From Wikipedia, the free encyclopedia
சுவை அரும்பு என்பது சுவைப் புலனங்கம் எனப்படும் சுவை வாங்கு கலங்களைக் கொண்ட கட்டமைப்பு ஆகும்.[1] சுவை வாங்கு கலங்கள் நாக்கின் மேற்பரப்பு, மென் அண்ணம், கன்னம், களத்தின் மேற்பகுதி மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடி முதாலானவற்றில் காணப்படும் அரும்பு முளைகளைச் சுற்றிக் காணப்படுகின்றன.இந்தக் கட்டமைப்பு சுவை உணர்வு தொடர்பான ஐந்து சுவைக் கூறுகளான உவர்ப்பு, புளிப்பு,கசப்பு, இனிப்பு, முதலானவற்றை இனங்காண உதவுகின்றன. இந்த ஒவ்வொரு சுவைக்கும் சிறப்பான பாகங்கள் பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்ற போதிலும், நாக்குநாக்கின் மேற்பரபிலுள்ள எந்தப்பகுதியின் மூலமும் எல்லாச் சுவைகளும் உணரக்கூடியது என்பதை அண்மைய ஆய்வுகள் காடுகின்றன. உமிழ்நீரில் கரைந்த நிலையில் உணவுக் கூறுகள் சுவைக் கலங்களை அடைந்து அதிலுள்ள நுண் துளையூடாக அங்கிருந்து சுவை நரம்புகளை அடைகின்றன.[1] இவை நாக்கிலுள்ள சுவை அரும்புகளைக் கொண்டுள்ள சுவை வாங்கு கலங்களில் காணப்படும். இந்த சுவை வாங்கு கலங்கள் சுவை தொடர்பான தகவல்களை மூளையிலுள்ள சுவைப்புலன் பிரதேசத்திற்குக் கடத்தும். இவை 7ஆம், 9ஆம் 10ஆம் மண்டையோட்டு நரம்புகளுடன் தொடர்புறும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/1402_The_Tongue.jpg/640px-1402_The_Tongue.jpg)
சராசரியாக மனிதரின் நாக்கில் சுமார் 2,000 முதல் 8,000 வரையான சுவை அரும்புகள் காணப்படும்.[2]