சுலபா ஆர்யா
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
சுலபா ஆர்யா (Sulabha Arya, பிறப்பு:15 சூலை 1950) இந்தி, மராத்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகத் துறையிலும் பணியாற்றும் இந்திய நடிகையாவார். இவர் மறைந்த மூத்த இந்திய ஒளிப்பதிவாளர் இசான் ஆரியாவின் மனைவியும், ஒளிப்பதிவாளர் சமீர் ஆர்யா, நடிகர் சாகர் ஆரியாவின் தாயுமாவார்.[3] சசுரல் கெண்டா பூல் படத்தில் சாந்தி மாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். சியாம் பெனகலின் அமராவதி கி கதையேன் படத்திலும் இலட்சுமம்மாவாக இவர் நடித்தார்.