சுருதி (வேதம்)
From Wikipedia, the free encyclopedia
தொன்றுதொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது எதுவோ அதுவே சுருதி (Shruti) (சமக்கிருதம்: श्रुति, IAST: śrūti) எனப்படும். நான்கு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய சாத்திரங்கள் சுருதிகள் எனப்படும்.[1] இந்த சாத்திரங்கள் அனைத்தும் எழுத்து வடிவம் பெறாது, குரு – சீடர் பரம்பரையில் உபதேசிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றி வைக்கப்பட்டது. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராக கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பு மாறவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவு படாது இருந்து வந்திருக்கிறது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி என்றும் மாறாதது, நிலையானது.[2]. சுருதியை விளக்க வந்தவைகளே ஸ்மிருதிகள்.
சார்வாகர்கள் சுருதி மற்றும் ஸ்மிருதிகளை ஏற்பதில்லை.