சுபாசினி மிசுதிரி
From Wikipedia, the free encyclopedia
சுபாசினி மிசுதிரி (Subhasini Mistry-பிறப்பு 1943) என்பவர் ஓர் இந்தியச் சமூக சேவகர். இவர் 23 வயதில் நான்கு குழந்தைகளுடன் விதவையானார். வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தும், காய்கறிகள் விற்றும், கூலித் தொழிலாளியாக வேலை செய்தும் வாழ்க்கையில் சிரமப்பட்டார். இவர் ஏழைகளுக்காக "மனிதநேய மருத்துவமனை" என்ற தொண்டு மருத்துவமனையைக் கட்டினார். 2018ஆம் ஆண்டில், இவரது சமூகப் பணியைப் பாராட்டி, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[1][2][3][4][5] 2017-இல் இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது பெற்ற 12 பேரில் இவரும் ஒருவர்.