முதலாம் மத்திய கால பாண்டிய மன்னர் From Wikipedia, the free encyclopedia
முதலாம் சுந்தர பாண்டியன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.
மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே கலகங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான். ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லாமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் சோழனை எதிர்த்து போர்க்களம் புகுந்து வென்று முடி கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீராபிடேகம் செய்துகொண்டு சிதம்பரத்தைத் தரிசித்தான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே மூன்றாம் ராச ராச சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் மூன்றாம் ராச ராச சோழன். சில காலத்தின் பின்னர் சோழர் கப்பஞ்செலுத்த மறுக்க மீண்டும் சோழ நாட்டைக் கைப்பற்றினான். சுந்தரபாண்டியன் காலத்தில் இருந்து சோழப் பேரரசு சோழநாட்டையும் இழந்து மீட்கும் நிலைக்கு சில முறை தள்ளப்பட்டது. இந்த பாண்டியனின் ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனலாம்.
இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் இவனும் ஒருவனாக காட்டப்படுகிறான். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.