சிவேஜிகன் தூபி
From Wikipedia, the free encyclopedia
சிவேஜிகன் தூபி அல்லது ஷ்வேஜிகன் பாயா என்பது மியான்மரில் உள்ள பாகன் அருகிலுள்ள நியாங்-யூ என்ற இடத்தில் உள்ள ஒரு புத்த கோவிலாகும். இந்தக் கோவில், பர்மிய தூபிகளின் ஒரு முன்மாதிரி, சிறிய கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களால் சூழப்பட்ட மையப்பகுதியில் ஒரு வட்டமான தங்க இலை வடிவ தூண் கொண்டது.
சிவேஜிகன் தூபி | |
---|---|
சிவேஜிகன் தூபி | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அடுக்குத் தூபி, பௌத்தம் |
இடம் | நியாங்-யூ, மியான்மர் |
ஆள்கூற்று | 21°11′43″N 94°53′38″E |
இந்தக் கோவிலைக் கட்டும் பணி கி.மு 1059–1060 ஆம் ஆண்டில் பகான் வம்சத்தை தோற்றுவித்த அரசர் அனுவரதா (ஆட்சி காலம் 1044 ஆண்டு தொடங்கி-1077 வரை) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கி.மு. 1102 ஆம் ஆண்டுவாக்கில் அரசர் கியன்சித்தா ஆட்சியின் போது நிறைவுற்றது.
பல நூற்றாண்டுகளாக தூபி பல பூகம்பங்கள் மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்தது, பல முறை புதுப்பிக்கப்பட்டது. சமீபத்திய புனரமைப்புகளின் போது 30,000 தாமிர தகடுகளால் தூபி மூடப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த உயரம் கொண்ட மாடிகள் இன்றளவும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கிறது.