![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map1.jpg/640px-McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map1.jpg&w=640&q=50)
சிம்லா ஒப்பந்தம், 1914
From Wikipedia, the free encyclopedia
சிம்லா ஒப்பந்தம், 1914 (Simla Accord) என்பது பிரித்தானிய இந்தியா, சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைகள் குறித்து சிம்லாவில் 1914இல் செய்து கொண்ட உடன்படிக்கையாகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map1.jpg/640px-McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map1.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map2.jpg/640px-McMahon_Line_Simla_Accord_Treaty_1914_Map2.jpg)
சிம்லா உடன்படிக்கையின் படி, திபெத் பகுதியை உள் திபெத் மற்றும் வெளி திபெத் என பிரிக்கப்பட்டது. திபெத்தின் மேற்கு பகுதியான வெளி திபெத், லாசாவை தலைமையிடமாகக் கொண்டு, சீனாவின் இறையாண்மைக்குட்பட்ட தன்னாட்சி பகுதியாகவும்; திபெத்தின் கிழக்குப் பகுதியான உள் திபெத் சீன அரசின் நேரடி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் படி திபெத் மற்றும் சீனாவிற்கும் இடையே மற்றும் பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே ஆன எல்லையை பின்னர் மெக்மோகன் கோட்டால் வரையறை செய்யப்பட்டது.[1] சிம்லா ஒப்பந்தப் படி பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத் எல்லைகளை வரையறைக்கும் எல்லைக் கோட்டு வரைபடங்கள் மார்ச் 1914இல் பிரித்தானியா மற்றும் திபெத் ஆட்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கை குறித்து சீனா எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.[2]
பின்னர் 3 சூலை 1914 அன்று சீனா, சிம்லா உடன்படிக்கையை ஏற்க மறுத்தது. சீனாவின் பிரதிநிதித்துவம் இன்றி, அதே நாளில் பிரித்தானியாவும், திபெத்தும் இணைந்து சிம்லா உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.[3][nb 1][4]